

யாழ். மடத்துவெளி புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை 17/4, பாரதிபுரம் கன்னியா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தில்லைநாதன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஸ்குமார், நிரோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹரிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கந்தராசா, இந்திராணி மற்றும் பரமேஸ்வரி, கமலாதேவி, சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், கந்தசாமி, இராஜலெட்சுமி, கந்தசாமி மற்றும் சிவானந்தலிங்கம், நவரெட்ணம், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, குணமணி மற்றும் நடராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் சபாரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஸ்ரீநிகா, கிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவகுரு நவலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை அன்புவழிபுரம் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details