யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று காலை கீரிமலை புனிததீர்த்தக் கரையில் இடம்பெற்றது.
வீட்டுக்கிருத்திய செய்யும் அதே நாள் சுவிஸ் பேர்ண் ஐரோப்பாபிளாட்ஸ் சிவன் கோயில் மண்டபத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெறும். நேரில் வந்தும் தொலைபேசியிலும் ஆறுதல் தெரிவித்த உறவினிர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அனபுடன் அழைக்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்