

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(சேரன் - பிரான்ஸ்), இரட்ணகுமார்(சோழன் - இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் வட மாகாண கணக்காளர்), விஜயகுமாரி(நயினா- பிரான்ஸ்), அருட்குமார்(பாண்டியன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மைதிலி, மின்னொலிவதனா, சுபேதரன், செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெராசந்தன், ஜனனொ, சுறோஜான், சுரேக்கன், சுறோமியா, அஷ்வின், அரசன், அஸ்றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.