Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 MAR 1929
விண்ணில் 21 DEC 2018
அமரர் கந்தையா இராசமணி
வயது 89
அமரர் கந்தையா இராசமணி 1929 - 2018 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளான் சமாதிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராசமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா ஐந்து  ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே! 

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: பிள்ளைகளான கமலா, தில்லையம்பலம், பொன்னம்பலம், விமலா, அரியமலர், கங்காதரன் மற்றும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 28 Dec, 2018