



கண்ணீர் காணிக்கை தன்னிறைவு அடக்கமுடன் தனக்கு என்ற பாணியிலே நிறைகின்ற புன்சிரிப்பும் நிறைவில்லா நற்பண்பும்.. பெற்ற மகன் பாசமும் பேறான ஒழுக்கமதும் கொற்றவை மனைவிடன் கொண்ட சீர் பக்தியுமாய் உத்மனாய் வாழ்தவரே- எங்கள் உயர்திரு குணமண்ணா..! நற்குணம் கொண்ட உன் குணம் நன்றாக பெருந்துமையா பெயருடனே நல்ல தமிழ் பாடகனாய்.. ஜெயா எனும் பாடகியை ஜெயிக்க வைத்த நாற்றாரமே..’ காலக்கொடியவனால்... கடைசிவரை உனை.. காணாது நீர் துயில - நெஞ்சம் கனத்த வலி கொள்ளுதே அண்ணா..!! வாழ்வாங்கு வாழ்ந்ததனை - நும் வரலாறு கூறுதே இம்மண்ணில்.. வையகத்தில் ஓய்வு பெற்று வானுறைவாய் தேவனிடம் ..!! அன்பால் இணைந்து அன்பாலயாவின் பழம்பெரும் அழகுதமிழ்ப் பாடகனே அறிவுப் பெரும் சோலையே..! அப்பன் கழல் சேர்ந்திடு - நும் ஆழ்துயிலின் துயர் மீள அரிய வழி காட்டிடு - நும் ஆத்மாவின் ஆசியினால் - எமை அமைதி பெறச் செய்திடுவோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி அன்பாலயா இசை குழுவினர்கள்