35ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா தணிகாசலம்
நீர்பாசன திணைக்கள களைஞ்சிய பொறுப்பாளர், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான நிர்வாக சபை முன்னாள் செயலாளர்
வயது 70
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தணிகாசலம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது
எல்லாம் உம் நினைவாக
துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
முப்பத்தைந்து ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்....
தகவல்:
தணிகாசலம் விஜயகுமார்(மகன் - பிரித்தானியா)