10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா பாக்கியம்மா
(சோதி)
யாழ் - டிறிபேக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 74
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாக்கியம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
பிள்ளைகளும், மருமக்களும், பேரப்பிள்ளைகளும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்!
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute