திதி: 10-06-2026
யாழ். புளியங்குடலைப் பிறப்பிடமாகவும், வேலனை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்துரை கந்தசாமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே ஐயா
குடும்பத்தின் குல விளக்காய், பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய், குடும்பம் எனும்
கோயிலிலே மனை சிறக்க வாழ்ந்த எங்கள்
ஐயா 25 ஆண்டுகள் கடந்தாலும் நீங்கள் எங்களை
தோள்மீது சுமந்து பாடிய பாடல் நான் பெற்ற
செல்வம் நலமான செல்வம் தேன் மொழி
பேசும் சிங்காராச் செல்வம் பாடல்கள் கேட்கும்
போது எல்லோரும் கலங்கி நிற்கின்றோம் அப்பா
மீண்டும் வரமாட்டாரா என ஏங்கி தவிப்பதை
விண்ணுலகத்திலிருந்து பார்ப்பீர்கள் என நினைத்து
வாழ்கின்றோம் ஐயா மீண்டும் ஒரு பிறவி இருந்தால்
எங்களிடம் வந்து விடுங்கள் ஐயா காவல் தெய்வமாய்
என்றும் நீங்கள் எங்களுடன் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..!