Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1937
இறப்பு 16 JUN 2019
அமரர் கந்தையா பத்மநாதன்
முன்னாள் தலைவர், தொழில் வல்லுநர்- காமாட்சி அம்பாள் ஐக்கிய கைத்தொழிற்சங்கம், காமாட்சி அம்பாள் சனசமூக நிலையம்
வயது 81
அமரர் கந்தையா பத்மநாதன் 1937 - 2019 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(சுவிஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பிருந்தா மற்றும் ரதீபன்(டோகா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(காமாட்சி அம்பாள் ஐக்கிய கைத்தொழில் சங்க முன்னாள் தலைவர்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவிபன், மதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூமணி, சண்முகதாஸ்(ஜேர்மனி), கிருஷ்ணபகவான்(சித்தவைத்தியர்), காலஞ்சென்றவர்களான சாரதா, தவராசா மற்றும் கணேசையா(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியதேவி(பிரான்ஸ்), தனேஸ்வரன்(ஜேர்மனி), லீலாவதி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் பத்மாவதி(பிரான்ஸ்), உமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

ராதா(யா/கனகரத்தினம் ம.ம.வி), விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

ஜனகன், ராகவன்(ஜேர்மனி), தாரணி(வ/வவுனியா தமிழ் ம.ம.வி), நிதர்சன், நிவேதா, கீர்த்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices