10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்.ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் தண்ணித்தாழ்வை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான
சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின்
இலக்கணமே நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே
நீர்
மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும்
உடைந்துதான் போகின்றோம்
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு
அகலாது
நாங்கள் உன்னை
மறந்தால் தானே
நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள்
தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்