

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பு, பார்வதி, சின்னம்மா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சாமிநாதன், கணபதிப்பிள்ளை மற்றும் வடிவேலு, செல்வராசா, இராமச்சந்திரன், காலஞ்சென்ற வேல்முருகு, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தியானந்தன்(நோர்வே), அமுதா(ஆசிரியை, யாழ். புற்றளை மகா வித்தியாலயம்), ஜெயானந்தன்(லண்டன்), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைவாணி(நோர்வே), சிறிதரன்(முகாமையாளர், கணனி வளநிலையம், வடமராட்சி கல்வி வலயம்), சுபாஜினி(லண்டன்), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன், அபிஷா, துவாரகன், அபிநயா, லக்ஷிகன், சஜீவன், லதுஷன், ஆரதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.