Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 17 DEC 1946
விண்ணில் 14 SEP 2024
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
இளைப்பாறிய பிரதேச சபை ஊழியர்
வயது 77
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் 1946 - 2024 வத்திராயன் தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்கள் மற்றும் அவர் நோயுற்றிருந்த வேளையில் அவருக்கு சிகிச்சை அளித்த தெல்லிப்பளை, யாழ்ப்பாணம், மந்திகை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார், ஏனைய உதவியாளர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 12-10-2024 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
மருதங்கேணி தெற்கு,
தாளையடி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.