யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநாதன் 31-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற ஆறுமுகம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(இலங்கை), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரேஸ்வரன்(இலங்கை), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌசல்யாதேவி(இலங்கை), சண்முகநாதன்(கனடா), செல்வக்காந்தன்(ஜேர்மனி), சுபத்திராதேவி(கனடா), சுசீலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானசேகரம்பிள்ளை (இலங்கை), மற்றும் புனிதா(கனடா), காலஞ்சென்ற நளாயினி(ஜேர்மனி), சாம்பசிவம்(கனடா), காந்தராசா(கனடா), நவத்தினம்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தட்ஷாயினி(சுவிஸ்), சஞ்சீவன், துர்ஷிகா(கனடா), துஷாந், பிரசாந், சதுர்சன்(கனடா), ஜனனி, நிராகுலன்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
சுமுகன், புராதனி(கனடா), பவித்திரா, நிஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மிஷாளன், சதுர்த்திகன்(இலங்கை), திஷான், திஷ்மியா, தார்மியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கலாவாணி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 04-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைதொடர்ந்து நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.