

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, திருகோணமலை, புலோலி, நெல்லியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், திருவாகரன், வசீகரன், ரகுகரன், மாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநாதன், காலஞ்சென்ற கமலாம்பிகை பத்மநாதன் மற்றும் மங்கையற்கரசி கணபதிப்பிள்ளை, பாலாம்பிகை சிவராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கோமளவள்ளி, சசிகலா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்ஷ்மி தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் சரஸ்வதி சிவஞானம், காலஞ்சென்ற சிவகாமதேவி, சிவசெந்திநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
ஆரூரன், ஆரண்யன், மிருதுளன், கேதாரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences.