உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி திருநகர் 4ம் யூனிட்யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை புஸ்பராணி அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் எல்லாம் வாழ்வாய் என காத்திருக்க காலன் உன்னை அழைத்ததென்ன? கண்ணீரில் எம்மை விட்டு... நெஞ்சில் நீங்கா துயர் இட்டு நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து இருபத்தி மூன்று ஆண்டுகள் கடந்தாலும்.... எழுப்பத்தி நான்காவது பிறந்தநாள் கடந்தாலும் உங்கள் மீது நாம் கொண்ட பாசம் துளியேனும் குறையாது...
உங்கள் நினைவுகளும் அழியவில்லை எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை அம்மா..
கொடிய நோயால் பாசம் கொண்ட எம்மை விட்டு அவசரத்தில் அமைதியானீர்கள் அம்மா..! நீங்கள் எமக்களித்த நற்பண்புகள் எம்மை என்றென்றும் நல்வழியில் நகர்த்திச்செல்லும் அம்மா...
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்..