31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை நாகேந்திரன்
(மகேந்திரன்)
வயது 67

அமரர் கணபதிப்பிள்ளை நாகேந்திரன்
1953 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இல. 21 இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை நாகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இடியென வந்தசெய்தி
எம் இதயத்தில் இறங்கி
உயிர்நாடி வரை அது ஊர்ந்து சென்றதுவோ
இனி எங்கே காண்போம் உம்மை!
கனிவான உன் பார்வையும்
புன்னகை தவழும் உன் பூமுகமும்
இன்று அடங்கிப் போனது?
கதிகலங்கி நிற்கின்றோம்..
எம்மையெல்லாம் மீளாத்துயில் கொண்டு
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
கண்ணீர் காணிக்கையாக்குகின்றோம் !
உங்கள் ஆத்ம சாந்திக்கு எமது ஆத்மார்த்த அஞ்சலிகள்.....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
தயாஸ்குமார்(மகன்) குடும்பம்