Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1933
இறப்பு 09 APR 2019
அமரர் கனகசபை நல்லையா
ஓய்வுபெற்ற காவற்துறை உத்தியோகத்தர்
வயது 85
அமரர் கனகசபை நல்லையா 1933 - 2019 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை நல்லையா அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(லண்டன்), மாலினி(லண்டன்), பவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி(அவுஸ்திரேலியா), ஏகாம்பரம்(லண்டன்), பிரதாபன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிவஞானம்(லண்டன்), வள்ளிநாயகி(லண்டன்), சுந்தரமூர்த்தி(லண்டன்), அருளானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காருண்யா, ஸ்ரீநிதி, சாம்பவி, அஞ்ஞனா, மேதா, மதுரா, கணாதிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices