10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கனகதம்பிராஜா இராசலட்சுமி
1949 -
2015
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:13/05/2025
யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகதம்பிராஜா இராசலட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பத்து ஆண்டு கரைந்ததம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.