Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1934
இறப்பு 30 AUG 2023
திரு கனகசபாபதி நாகரத்தினம் (இளையாம்பி)
ஓய்வுபெற்ற பட வரைஞர்- Draughs Man
வயது 89
திரு கனகசபாபதி நாகரத்தினம் 1934 - 2023 சித்திரமேழி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், சித்திரமேழி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி நாகரத்தினம் அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விக்கிரமசிங்கம், பாலசிங்கம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்கையற்செல்வம், முருகானந்தன்(கனடா), மோகனச்செல்வம்(லண்டன்), மோகனவிஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன் மற்றும் ராஜினி(கனடா), திலகராஜா(லண்டன்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கம்ஷாயினி, கஜானன், தரஞ்ஜன், தனுஷிகா. கிஷானி, கபிஷா, செந்தூரன், பானுஷா, பிருத்விகா, லிஷாங்கி, அபிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாதர்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்கை - மகள்
கஜன் - பேரன்
முருகானந்தன் - மகன்
மோகனா - மகள்
விஜி - மகள்