

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை விமலாதேவி அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா(பாணந்துறை பிரபல வர்த்தகர்- பிசின் கந்தையா) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பாலன் -கனடா), கனகரூபா(சுவிஸ்), சிவரூபன்(கனடா), காலஞ்சென்ற செங்குட்டுவன்(புனிதன்), வாசுகி(வவுனியா), மஞ்சுளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கௌரிதேவி(கனடா), தயாபரன்(சுவிஸ்), நவரஞ்சினி(கனடா), விவேகானந்தராசா(வவுனியா), மகேந்திரராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை, சரோஜினி தேவி(உருத்திரபுரம்), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவன், வசந்தாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலேந்திரம், பொன்னம்மா, மனோகரராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஓவியா, துவ்யா, நாவின், செங்கவி, சாம்பவி, பானுஜா, தஸ்மிகா, கேதாரணி, கஜானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.