யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரவுண் றோடு, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீண்ட உன் மகிழ்வெளி சோலையில் உடனிருந்தேன்.
காலவடுக் கொடுவழியின் முட்களிலும் உடன் நடந்தேன்.
போகுமிடம் கூறாமல்ஒருக்காலும் செல்லாத என் தலைவா.
நெடுவழிப் பயணத்தில் நீ தனிவழியே எனைவிட்டு
மாதம் ஒன்றானதையா உனைக்காண என்மனது தவிக்குதையா.
அன்பின் இருப்பிடமே பாசத்தின் உறைவிடமே,
மனது தவிக்குதப்பா உங்கள் ஆசைமுகம் பார்ப்பதற்கு.
சென்று வாறேன் என்று போனீர்களே அப்பா
கண்ணீரோடு நாமிருக்க இன்று நீங்கள் எங்கேயப்பா?.
நாட்கள் 31 விரைந்தே போனதப்பா அன்புத் தந்தையே
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்நினைத்தே நாம் வாழ்கிறோம்.
எத்தனை நாட்கள் சென்றாலும் நெஞ்சைவிட்டகலாது உங்கள் நினைவு.
நாம் மூச்சுவிடும் காலம்வரை உங்கள் நினைவிருக்கும் எம் நெஞ்சோடு.
நீங்கள் சென்ற இடம் சிறக்க இறைஞ்சுகின்றோம் இறைவனிடம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. வீட்டுக் கிருத்திய கிரியைகள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலும், அஞ்சலி நிகழ்வும், மதியபோசனமும் இலக்கம் 733 Birchmount Rd, ,Scarborough , Ont,,M1K 1R5 என்ற முகவரியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும்.
Sad to hear the news. Ohm Shanthi. Thiruketheeswaran