உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் கனகம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-04-2025
இம் மண்ணில் எம்மை மலரவைத்த தாயே! ஆண்டுகள் பத்து ஆனாலும் உமது எண்ணங்கள் எமது கண்ணில்..... துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து பார்த்துப் பார்த்து வளர்த்தது பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே உங்கள் அன்பின் ஆழம்தான் இன்றும் எம் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது...
நீங்கள் எங்களை ஒருபோதும் விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் தான் இருக்கின்றீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
வற்றாத நினைவில் நித்தம் வளர்கிறா வாசமாக!!