1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகலிங்கம் ஜெயலெட்சுமி
(ஜெயா)
வயது 59

அமரர் கனகலிங்கம் ஜெயலெட்சுமி
1959 -
2019
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் ஜெயலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்