யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலினி சாந்தகுமார் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகள், கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சுப்பிரமணியம் இரத்தினம்(பிரித்தானியா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற மங்களேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சாந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பாருணி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கல்யாணி(பிரித்தானியா), பகீரதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோகுலன்(பிரித்தானியா), சித்திரா(சுவிஸ்), ஜெயகணேஸ்(அவுஸ்திரேலியா), தயாளினி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), செல்வி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுசன், பைரவி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
காயத்திரி அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
அஸ்வின், ஆதித்தன், பிரியா, ஐங்கரன், ஆதவன், காலஞ்சென்றவர்களான அஜித், பிரவீன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.