Clicky

மரண அறிவித்தல்
திருமதி கயிலாயநாதன் கனகாம்பிகை (Adp) ஓய்வுபெற்ற உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வயது 75 பிறப்பு : 21 MAR 1944 - இறப்பு : 16 NOV 2019
பிறந்த இடம் மூளாய், Sri Lanka
வாழ்ந்த இடம் சுழிபுரம், Sri Lanka
திருமதி கயிலாயநாதன் கனகாம்பிகை 1944 - 2019 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் சித்தர்வளவை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கயிலாயநாதன் கனகாம்பிகை அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.பூலோகசுந்தரம் கயிலாயநாதன்(DAMS-Cey) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  விசுவநாதர் கந்தையா(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர்), மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான Dr.தம்பிப்பிள்ளை பூலோகசுந்தரம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பிரியதர்ஷினி(B.A.பொருளியல் Hons - கனடா), சுகந்தி(HNDA-UK), பூலோகசுந்தரம்(HNDA, MBA, MA - UK), நிரஞ்சனி(BA-Hons, MA பொருளியல் - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன்(முகாமையாளர்-கனடா), தனேஷ்குமார்(பொறியியலாளர் - UK), அரிசூதனா(கணக்காளர் -UK), செந்தூரன்(பொறியியலாளர் - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr.ஏகாம்பரமூர்த்தி பத்மராணி, மனோகரன் ஜெயராணி(கணக்காளர் - UK), தனராஜ் ஞானாம்பிகை, முருகதாசன் இந்திராணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

வர்ஷனா, கிஷானா, கபிஷனா, கிரிஷாந், றம்ஷிகா, கோஷிகா, பிரணாஷ் அகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-11-2019 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 1:30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

Photos

No Photos

Notices