Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசநாதன் கமலாம்பிகை
இறப்பு - 20 FEB 2014
அமரர் கைலாசநாதன் கமலாம்பிகை 2014 மண்டைதீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கு பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசநாதன் கமலாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தாயே.....

இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices