யாழ். 127 பாங்ஷால் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அன்ரன்றோய் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காஸ்மிர் அன்ரனி யோசப், மரியம்மா அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியநாயகம், விநிசிற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக்குமார், பிரதீப்ராஜன், ஜெகதீபராஜன், நிறோஜ்குமார், ரஜேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் ஜோர்ச், சிங்கராயர்(கனடா), கிரிஸ்டியன்(ஜேர்மனி), மரியராணி(திருகோணமலை குச்சவெளி), மேரிமார்கிறட்(யாழ்ப்பாணம்), மேரியோசபின்(ஜேர்மனி), நியூடன்(ஜேர்மனி), ஜெகநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-03-2019 சனிக்கிழமை அன்று மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.