5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
வயது 60
அமரர் ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
1960 -
2020
வல்வெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
42
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தி பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சகோதரி உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
சகோதரி நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
சகோதரி சகோதரி என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
இன்றோடு ஐந்தாண்டுகள் கழிந்தாலும்
உங்கள் நினைவுகளுடன் மறக்க
முடியாமல் மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்..!
தகவல்:
சகோதரிகள்,மைத்துனர்கள் மற்றும் குடும்பத்தினர்.