யாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் தவமலர் அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னமுத்து தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான மகேசன் கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேசன் ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனார்த்தன், பிரசாந்தன், மயூரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உஷாயினி, அருந்ததி, தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திவாகினி, கிருஷாயினி, டயனிதா, பிரனேஷ், நித்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.