Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1938
இறப்பு 15 APR 2021
அமரர் இளையதம்பி ஆனந்தநடராஜா
முன்னாள் பதிவாளார்- கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம்
வயது 82
அமரர் இளையதம்பி ஆனந்தநடராஜா 1938 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார்பண்ணை சிவப்பிரகசம் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி ஆனந்தநடராஜா அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவகொழுந்து தம்பதிகளின் புத்திரரும், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்(ஆனந்த வாத்தியார்) பாரசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மாதினியார் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தகுமார்(Built Element Ltd Rathmalana), சிவகுமார்(சுவிஸ்), ஜெகத்ஜெனனி(பிரான்ஸ்), ஒங்காரனி, ஸ்ரீதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாமகேஸ்வரி(Presbyterian Girls School Colombo- 10), சிவகொளரி(சுவிஸ்), காலஞ்சென்ற வேணீஸ்வரன் மற்றும் ஜெயசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களா மகேஸ்வரி, நல்லைநாதன், வைகுந்தவாசன் மற்றும் பத்மாவதி, நவமணி, கதிர்காமத்தம்பி, ரகுநாதன், புனிதவதி, பரமஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களா முருகவேள், முத்துக்குமாரசாமி, பகவதி, சிவக்கொழுந்து, பாண்டிமாதேவி மற்றும் சரவணபவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினுஷன், ஜனந்தன், லக்சுமிதா, வர்சினி, ஹர்சினி, மதுவதி, ஸ்ரீகணேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 May, 2021