யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட குணரத்னம் நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமை ஈன்று எடுத்த அன்புத்தாயே..
அன்பையும் பண்பையும் பாசத்தையும்
ஊட்டி
வளர்த்தீரே அம்மா..
கல்வியை புகட்டி எம்மை ஒழுக்கமாக
வழி நடத்திச்சென்றீரே
அம்மா..
இனி எப்போது உன் இன் முகம் காண்போம் அன்னையே..
மாதம் ஒன்று ஆனாலும்
ஆறவில்லை அம்மா எம் துயரம்..
என்றும் உங்கள் நினைவுகளுடன்..
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வுகள் 20-0-2025வியாழக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 22-03-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவர்து இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Deepest condolence rest in peace Amma