யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணராஜா கிருபாநிதி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் கடந்தாலும்
ஓயவில்லை உங்களின்
நினைவுகள் அகலவில்லை
அன்பு முகம்..!
உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
நியமில்லை என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்.. இறைவனும்
இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம்
உங்களின் இறப்பால்..!
அம்மா பதின்னைந்து ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது நீரை
விட்டு அலை பிரியாது எம் இதயங்களை
விட்டு என்றும் பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்.!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!