5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானமணி செபஞானம்
(பவளம், பிரீடா)
வயது 60
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, மாபோலை, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானமணி செபஞானம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்