யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரன் சறோஜினிதேவி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், சின்னப்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கெங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற வசந்தகுமார்(ஜேர்மனி), பாலகுமார்(லண்டன்), காலஞ்சென்ற கெங்காதேவி, செல்வகுமார்(சரசாலை), கோகுலகுமார்(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, ஜீவரூபி, சுபாசினி, அஜந்தா, ஜெயரஜினி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்தோஷ், சுவேதா, விம்மி, அஜய், பிரசாந்திகா, தர்மிகா, கானுஜன், பிரவீன், அக்ஷயா, மதுஜா, மதுசாந், பவிசாளினி, துவாரகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியை 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கொம்பிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915753600185
- Mobile : +447440744330
- Mobile : +447908736278
- Mobile : +447947555095