
யாழ். சாவகச்சேரி பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் இராஜபூபதி அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி(இராசமணி), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
துரைரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை, விமலாதேவி, யோகீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜரஞ்சிதம்(ஆசிரியை- யா/ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), இராஜஜீவி(ஆசிரியை- யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரசேகரம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சாவகச்சேரி பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகாமிப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற நடராஜா, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குகரதன்(தொழில்நுட்பவியல் நிறுவகம்- மொரட்டுவைப் பல்கலைக்கழகம், NDT), பிரியந்தி(சித்த மருத்துவமும் அறுவை சிகிச்சையும்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தனுஷிகா(பிரயோக விஞ்ஞானம்- வவுனியாப் பல்கலைக்கழகம்), பிறின்ஷிகா, குகபரன்(பொறியியல் பீடம்- மொரட்டுவைப் பல்கலைக்கழகம்), குகபவன்(A/L- யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கெளசல்யா(லண்டன்), கெளந்தரிகா(லண்டன்), கெளதினியா(லண்டன்), நற்குணவதனி, சிவதர்சினி, பூங்கோதை(ஜேர்மனி), தேவிகா(ஆசிரியை- யா/மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), காண்டீபன், தர்மினி, கபிதீபன், வனஜா, சுகுணன்(கனடா), கெளரி, சசி, கிரித்திகா(ஆசிரியை- யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பெரிய அரசடி,
அரசடி,
சாவகச்சேரி.