10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசன் செல்லையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றதப்பா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
ஆண்டு பத்து ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் அப்பா
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
Varathan(Son)-London
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute