யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு தட்டயமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கானதாசன் செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாங்கள் துயருற்று இருந்தவேளை நேரில் வருகை தந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் துக்கம் பகிர்ந்தவர்க்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், அனுதாபக் கவிதைகள் அனுப்பியவர்களுக்கும், அனுதாபங்களை தெரிவித்தவர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். அதனைத் தொடர்ந்து அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்திய கிரியைகள் எதிர்வரும் 16.09.2020 புதன்கிழமை மு.ப. 11.30 மணியளவில் முத்துஐயன்கட்டு தட்டயமலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.