யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, ஜேர்மனி Nienburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனவல் அலன்றோஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்கள் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன், நீங்கள் பல ஆண்டுகளாக எனது சிறந்த நண்பராக இருந்தீர்கள், எப்போதும் இருப்பீர்கள். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.