யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, சுவிஸ் Zug ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் பாக்கியநாதர் ஜெயவதனி அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற எலியாஸ், இசபெல் தம்பதிகளின் மருமகளும்,
எலியாஸ் பாக்கியநாதர் அவர்களின் பாசமிகு துணைவியும்,
வில்சன்(லண்டன்), ஸ்ரெனிஸ்ரன்(ஜேர்மனி), லக்டன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரி றொசிற்றா, ஜெருஷா, ஜெனிபர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்றியன், ஆகவி, றியானா, றொசானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜேசுராஜா(கனடா), புஸ்பநாதன்(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), சுவன்ரினி(கனடா), அமலதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லெற்றிசியா, ஜெயராணி, றமோனாவாணி, விக்ரர் குமார், றாஜினி, காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், அல்பிரட் மற்றும் திரேசாமலர்(இலங்கை), ஆரோக்கியமலர்(கனடா), அருளானந்தம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-01-2026 திங்கட்கிழமை அன்று காலை 09:30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காக்கைதீவு அடைக்கலநாயகி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest heartfelt condolences to your husband and sons. May her soul rest in heaven