Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஏகாம்பரம் கனகம்மா 2017 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கு காளிகோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், வவுனியா தோணிக்கல் குட்செட்வீதி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் கனகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!

மறுபடி வர வேண்டும் உன் மடியில்
தலை சாய்த்து உறங்க வேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே!

அம்மா என்று குரல் எழப்புகிறோம்
ஆனால் பதில் இல்லையே!
நீங்கள் எங்களைப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் சென்றாலும்
எங்களோடு வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றீர்கள் அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute