யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த EK சண்முகநாதன் அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணை இமை காத்தது போல்
என்னையும் பிள்ளைகளையும் பாதுகாத்து வைத்தீரே
அந்நிய நாட்டில் நைஜீரியாவில் தவிக்கவிட்டு சென்றீரே
அந்த நினைவை என்னால் மறக்க முடியாது
நினைக்கும் போதெல்லாம் எம்மால் மறக்க முடியாத வேதனை
வானடைந்து 40 வருடம் ஆனாலும்
உம் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உம் ஆசைமுகம் என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று வருந்துகிறேன்..
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே என் அன்புக் கணவரே
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
அதிபராய் எத்தனையோ மாணவர்களுக்கு
வழி காட்டியவரே
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
கண்ணீர் மல்க தேடுகின்றோம்
எங்கு சென்றீரோ
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க எங்களுக்கு யாசிக்க உங்கள் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
40 ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
அப்பா என்று அழைக்கயிலே மனமெல்லாம் நிறைகிறதே
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...