யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் சிரோன்மணி 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் சிரோன்மணி ஏகாம்பரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் GOLDAN HOUSE (195 Route de Saint. Leu - 93800 Epinay-Sur-Seine)எனும் மண்டபத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் நினைவஞ்சலி நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி அவர்களின் மறைவையிட்டு, அன்னாரின் பிள்ளைகளான மதி, மகிந்தன், மற்றையவர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்....