
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சண்முகலிங்கம் அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பியப்பா சண்முகலிங்கம்(சுருவில்), ராசலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சுபோதினி, சுபேந்திரன், Dr.நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலம்பிகை அவர்களின் அன்பு மைத்துனியும்,
சத்தியன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மாணிக்கவாசகன், காலஞ்சென்ற சபாநாதன், சிவநாதன், உலகநாதன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.ராசலிங்கம், சிவலிங்கம், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, அருள்கந்தராஜன், நவநீதராஜன் ஆகியோரின் அருமை மருமகளும்,
மகாலெட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தலெட்சுமி, சந்திரமதி ஆகியோரின் ஆசை பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My family is saddened by your loss and our thoughts and prayers are with you! ?