மன்னார் செபஸ்ரியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த டோமினிக் பிரான்சிஸ்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா எங்களை விட்டுப்பிரிந்து இன்று பத்து ஆண்டுகள் ஆனது அப்பா...
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள் என்றெண்ணி வாழ்ந்தோம் அப்பா...
ஆறாத்துயராய் ஆனதே உங்கள் பிரிவு எம்முள்ளே அன்போடு பண்பையும் பாசத்தையும் எம்முள் விதைத்து எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம் அப்பா நீங்கள் எங்களோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!