Clicky

மரண அறிவித்தல்
அமரர் திவ்யசிரோன்மணி நாகராசா ஓய்வுநிலை அதிபர் யாழ். இந்து மகளிர் கல்லூரி வயது 85 பிறப்பு : 21 OCT 1933 - இறப்பு : 26 NOV 2018
வாழ்ந்த இடம் வடலியடைப்பு, Sri Lanka
அமரர் திவ்யசிரோன்மணி நாகராசா 1933 - 2018 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திவ்யசிரோன்மணி நாகராசா அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை இளையதம்பி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா(ஓய்வுநிலை ஆசிரியர்- EKN) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரஜனி(அவுஸ்திரேலியா), அசோகன்(புரூணை), கல்யாணி(லண்டன்), சுமதி(அவுஸ்திரேலியா), உதயணன்(விமலன் உரிமையாளர் மாதவா ஸ்ரூடியோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராமேஸ்வரன், வசந்தி, நடராசா, இரஞ்சகுமார், ரதனி(கொக்குவில் நாமகள் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருக்குலசிங்கம், சிவபாலசிங்கம், வரத சிரோன்மணி, தனபாலசிங்கம், பூபாலசிங்கம், ஜெயமங்கள சிரோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, தங்கராசா, யோகராசா மற்றும் செல்வராசா, தவமணிதேவி, காலஞ்சென்ற லீலாவதி மற்றும் லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரூசன், ஜனனி, அஸ்வின், அக்சரா, அருணன், சாம்பவி, தனிஸ்கன், தனிஸ்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லமான இல. 40/5 A, புகையிரத கிழக்கு ஓழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டு, 29-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்