10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனலெட்சுமி மருதையனார்
இறப்பு
- 26 AUG 2013
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நாரந்தணை வடக்கைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கு கதிர்வேலாயுத சுவாமி கோயிலடியை வாழ்விடமாகவும், இறுதிக்காலத்தில் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி மருதையனார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்