

கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருச்செல்வம் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனந்தராம், அனந்தசகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, சிவராசா, அம்பலவாணபிள்ளை, சரஸ்வதி(பிரான்ஸ்), கிருஸ்ணபிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமு, பரமேஸ்வரி, பரமசாமி(பிரான்ஸ்), ராசமலர், ராசலட்சுமி, நடராஜா, காந்திமதி, மதிவதனன், புனிதாம்பிகை, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன்கோவிலடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details