Clicky

மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி தாமோதரம்பிள்ளை இளைப்பாறிய அதிபர் தமிழ்ப்பிரிவு D.S.சேனாநாயக்க கல்லூரி வயது 94 பிறப்பு : 23 JAN 1925 - இறப்பு : 22 DEC 2019
திரு சின்னத்தம்பி தாமோதரம்பிள்ளை 1925 - 2019 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக் கட்டுவன் வடக்கு மற்றும் C2/2, அரச தொடர்மாடி, ஆஸ்பத்திரி வீதி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி(கொழும்பு D.S. சேனாநாயக்க கல்லூரி தமிழ்ப்பிரிவின் அதிபராகவும் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ஆற்றியவர்) தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

குகவதனி, யோகபார்த்திபன்(SLT), பிரபாகரன்(இங்கிலாந்து), Dr. சித்திராஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சன், பிரபாலினி, வாசுகி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுன் ராகுல், ஹம்சானந்தி, யோகபிரஜாபன், சுபப்பிரதன், நந்தகோபன், கஸ்தூரி, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் 24-12-2019, 25-12-2019 செவ்வாய், புதன் கிழமைகளில் காலை 08:30 மணி முதல் மாலை 06:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 26-12-2019 வியாழக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன், மகள்