யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, கொழும்பு வெள்ளவத்தை Frances Road, பிரித்தானியா லண்டன் Morden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராமச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-04-2023 புதன்கிழமை அன்று 06:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்னாரது இல்லத்தில்(உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்) 11:00 மணியளவில் நடைபெறும். அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி நவிலல் நிகழ்வு 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 11:00 மணிமுதல் 04:00 மணிவரை Imperial Sports Ground Bishopsford Road Morden SM4 6BF எனும் முகவரியில் நடைபெறும்.