

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கீரிமலை, கொக்குவில் பொற்பதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அம்மா சுந்தரமூர்த்தி சர்மா அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று நித்திய சுமங்கலி ஆனார்கள்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கீரிமலை பிரமஸ்ரீ சபாஇரத்தின குருக்கள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிரமஸ்ரீ சுந்தரமூர்த்தி சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீமான் ரவிசங்கர் சர்மா(ஜேர்மனி), ஸ்ரீமான் உதய சங்கர் சர்மா(சுவிஸ்), ஸ்ரீமான் ஜீவ சங்கர் சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீமதி கலா, ஸ்ரீமதி ஜெகதீஸ்வரி, ஸ்ரீமதி பாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரக்ஷிகாதீபிகா, கம்சத்வனி, ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2025 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94715828465
- Mobile : +4917670277481
- Mobile : +94715828465